தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு மதிப்பெண்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.
ஆனால் இந்த திட்டம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறையில் இல்லை என்பது தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 11ஆம் 12 ஆம் வகுப்பு மாணவர்களை போலவே இனிவரும் நாட்களில் 10ம் வகுப்பு மாணவர்களும் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த அறிவிப்பு மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அயலான் படத்திற்கு குரல் கொடுத்திருக்கும் பிரபல நடிகர்.. வெளியான நியூ அப்டேட்!!