இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான விலை மாற்றம் குறித்த விபரங்களை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன. அதில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிலிண்டர் விலை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றில் விலை மாற்றம் செய்யும் உரிமம் அனைத்தும் அரசிடம் இருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு அடிமட்டத்திற்கு சென்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையில் பெரிதளவில் மாற்றம் செய்யப்படவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் சிறிதளவு குறைக்கப்பட்டது. அதன்பின்னர் 3 மாதங்களாக விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வர்த்தகம் முழுவீச்சில் செய்லபட தொடங்கி உள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – அடுத்த புயலா??
இன்று முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. வணிக சிலிண்டர் விலை ரூ.56.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.660 மற்றும் மானியமில்லாத வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1410.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.