சென்னையில் கடந்த வாரத்தில் தொடர்ந்து 7 நாட்களாக குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீதான முதலீடு பன்மடங்கு உயர்ந்தது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.30 அதிகரித்து 4,641 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.37,128க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களை கவலை அடைய செய்துள்ளது.