ஆசிய கோப்பை தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் அணி பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையிலும், மற்ற போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெற உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடர், தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புதிய மாற்றம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் ஹாரூன் ரஷீத் கடந்த மாதம் பதவி விலகியதில் இருந்து அந்த பதவி காலியாக மாறியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இரண்டாவது முறையாக தேசிய அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.