தமிழகத்தில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு” அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் கீழ் இட ஒதுக்கீட்டை பின்பற்றி 500 மாணவர்கள். 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுதோறும் ரூ.10,000 வரை உதவித்தொகை, அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆசிய கோப்பைக்கு முன் பாகிஸ்தான் செய்த திடீர் மாற்றம்…, வெளியான முக்கிய அப்டேட்!!
இதன் முதல் தாள் தேர்வு 23.09.2023 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2ஆம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள 11ஆம் வகுப்பு மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (ஆகஸ்ட் 7) முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உடன் ரூ.50 கட்டணத்தை சேர்த்து பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.