பிரபல கால்பந்தாட்ட வீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிகளுக்கு பிறந்த, இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்து விட்டதாக ரொனால்டோ சோகத்துடன் அறிவித்துள்ளார்.
ரசிகர்கள் சோகம்:
பிரபல மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட குழுவின் நட்சத்திர வீரராக விளங்குபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு, இரண்டு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் கர்ப்பமாக இருந்து வந்தார். தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கையில், தம்பதிகள் இருவரும் இருந்து வந்தனர். இந்த நிலையில், ரோட்ரிக்ஸ்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளில், ஆண் குழந்தை இறந்து விட்டதாகவும், பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் ரொனால்டோ தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், அந்த துயரமான வலியை தாங்கள் அனுபவித்து வருவதாகவும், இதுபோன்ற நேரத்தில் தனிமையை விரும்புவதாகவும் சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த துக்கமான, சம்பவத்தில் தாங்களும் பங்கு கொள்வதாக மான்செஸ்டர் யுனைட்டட் கால்ப்பந்தாட்ட குழு அறிவித்துள்ளது. ரொனால்டோவின் இந்த துயர நிலையை நினைத்து, அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்