தொழிலதிபர் அம்பானியின் வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் – என்ஐஏ விசாரணை!!

0

கடந்த மாதம் 25ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே மர்மமான வாகனத்தில் வெடி பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெடிபொருள் வழக்கு மாற்றம்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பின் அருகே கடந்த மாதம் 25ம் தேதி வெடிபொருட்கள் அடங்கிய மர்ம வாகனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை சோதனை செய்த போது வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் அதனுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வாகனத்தை கைப்பற்றிய மஹாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு வெடிபொருட்கள் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. தொடர்ந்து போலீசார் நடத்தி வந்த விசாரணையில், வாகன உதிரிபாகங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹிரேன் மன்சுக்(48) என்பவருக்கு அந்த கார் சொந்தமானது என தெரியவந்தது.

விருது வழங்கும் விழாவில் புகழை கட்டிப்பிடித்து அழுத அஸ்வின் – வைரலாகும் புகைப்படம்!!

இந்நிலையில் மும்பை தானே நகரின் அருகே உள்ள கல்வா கிரீக் என்ற நீரோடையில் ஹிரேன் மன்சுக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மஹாராஷ்டிரா போலீசார் நடத்தி வந்த விசாரணையை மறு வழக்குப்பதிவு செய்து தற்போது என்ஐஏ விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here