FIFA உலக கோப்பை தொடரின் குரூப் A யில் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகள் ரவுண்டு 16க்கு முன்னேறியுள்ளனர்.
FIFA உலக கோப்பை:
FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்டு 16 க்கு தகுதி பெறுவதற்காக, 32 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இந்த வகையில் நேற்று, குரூப் A யில் இடம்பெற்றுள்ள, ஈக்வடார் அணியை எதிர்த்து செனகல் அணி மோதியது. இதில், செனகல் அணி டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், ஈக்வடார் அணியோ வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இரு அணிகளும் ஆரம்ப முதலே தொடர் தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதில், செனகல் அணி வீரர் 44 வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, 2வது பாதியில் ஈக்வடார் வீரர் 67 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனை தொடர்ந்து, செனகல் வீரர் அடுத்த 3 நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்தார். இதனால், செனகல் அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நம்பர் 1 அணியை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!!
இதே போல, நெதர்லாந்து அணியை எதிர்த்து, ஆறுதல் வெற்றியை பெற வேண்டிய முனைப்பில் கத்தார் அணி மோதியது. இந்த போட்டியில், நெதர்லாந்து அணி, முதல் மற்றும் 2வது பாதியில் 2 கோல்களை அடித்தது. கடைசி வரை கத்தார் அணி ஒரு கோலுக்காக முயற்சித்து மட்டுமே வந்ததால் 0-2 என்ற கோல் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. இதனால், குரூப் A யில், நெதர்லாந்து அணி 7, செனகல் 6 புள்ளிகளுடன் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறியது.