டென்னிஸ் பயணத்தை முடித்த ரோஜர் பெடரர்.., கடைசி போட்டியில் தோல்வி.., வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
டென்னிஸ் பயணத்தை முடித்த ரோஜர் பெடரர்.., கடைசி போட்டியில் தோல்வி.., வருத்தத்தில் ரசிகர்கள்!!
டென்னிஸ் பயணத்தை முடித்த ரோஜர் பெடரர்.., கடைசி போட்டியில் தோல்வி.., வருத்தத்தில் ரசிகர்கள்!!

லேவர் டென்னிஸ் கோப்பைக்கு பிறகு, அனைத்து விதமான டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிஸ் நாட்டு வீரர் ரோஜர் பெடரர் விடை பெற்றார்.

ரோஜர் பெடரர்

லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் டென்னிஸ் கோப்பை தொடருக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஐரோப்பியாவின் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஜோடி, உலக அணியான பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் ஜோடியை எதிர்கொண்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் ஜோடி வெற்றி பெற்று அசத்தியது. மேலும் இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் ஜோடியின் தோல்வி ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

நான் அப்படியே Shock ஆயிட்டேன்., ரோஹித்தின் ஆட்டத்தால் மிரண்டு போன ரசிகர்கள்., சிக்ஸர் மழை பொழிந்து சாதனை!!

இந்த போட்டியில் விளையாடி தோல்வி அடைந்த ரோஜர் பெடரர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் தனது ஓய்வு குறித்து பேசிய பெடரர் இந்த நாள் எனது வாழ்நாளில் முக்கியமான தருணம். இன்று நான் போட்டியில் தோல்வி அடைந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கேன் என பெடரர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here