விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் கோபத்துடன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து 1000 வது எபிசோடை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பல்வேறு டுவிஸ்ட் களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களில் ஒன்றை பெற்று விடுகிறது. இந்த தொடரில் கண்ணன் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் இதற்கு முன் இந்த சீரியலில் நடித்த, விஜே தீபிகாவுடன் இணைந்து புதிய ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் “அவ என்ன தேடி வந்த அஞ்சல” என்ற பாடலுக்கு இருவரும் ஆடியுள்ளனர். இந்தப் பாடலின், இறுதியில் சரவணா விக்ரம் மிகவும் கோபப்பட்டு உக்கிரமாக ஆடியுள்ளார்.
கோபி-ராதிகா திருமண கட்டவுட்டை பார்த்து வெறியாகும் பாக்கியா.., கல்யாணத்துக்கு வந்த அடுத்த ஆப்பு!!
இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், உங்களை ரொமான்டிக் ஹீரோவாக பார்க்கவே விரும்புகிறோம், இப்படி கோபம் நிறைந்த சோகமான கண்ணன் எங்களுக்கு வேண்டாம் என காமெடியாக பதிவு செய்துள்ளனர். இருந்தாலும், கோபப்பட்டு, கதிர் போன மாதிரி, கண்ணனும் வீட்டை விட்டுப் போகாமல் இருந்தால் சரி, என சீரியல் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram