ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது T20 போட்டியில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி அடைய செய்துள்ளார்.
இந்தியா VS ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி மழை காரணமாக 8 ஒவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 8 ஓவர் முடிவில் 91 ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி தொடக்கத்தில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் பட்டைய கிளப்ப ஆரம்பித்தனர். இதனால் இந்திய அணி இறுதியில் 7.2 ஓவர் முடிவில் 91 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றிக்கு இந்திய அணியின் ரோகித் சர்மா தான் முக்கிய காரணமாக இருந்தார். இவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 46 ரன்கள் குவித்தார்.
ரோஹித்தின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்கள்.., ஒரு போட்டியில் இப்படி ஒரு முன்னேற்றமா??
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார். மேலும் போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா என்னுடைய ஆட்டம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது என கூறினார். இதே போன்று அடுத்த போட்டியிலும் விளையாடி தொடரை கைபற்றுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் இவரது ஆட்டம் ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.