பீகார் மாநிலத்தில் ஒரு இளம்பெண் செய்த காரியம் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்ஷு என்ற இளம்பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் சாக்கடை கால்வாய் ஓரம் முகம் சிதைந்து அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு இளம் பெண்ணின் சடலம் போலீசாரால் கண்டுபிடுக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த சடலம் அன்ஷு தான் என்று புகார் கொடுத்த குடும்பத்தினர் சடலத்தின் ஆடைகளை பார்த்து உறுதி செய்து, உரிய சடங்குகளோடு அடக்கம் செய்துள்ளனர். அவர் இறப்பு செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மறைந்த இளம் பெண்ணின் தந்தைக்கு ஒரு வீடியோ கால் வந்துள்ளது.அது வேற யாரும் இல்லை இறந்ததாக சொன்ன அன்ஷு தான். அவர் தந்தையிடம் தாம் உயிருடன் இருப்பதாகவும், தனது லவ்வரை கல்யாணம் செய்ய தான் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும்,தற்போது தனது கணவர் வீட்டில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான வழக்கு., நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!