தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கு மேலாக டாஸ்மாக் கடைகளை மாநில அரசு நடத்தி வருகிறது. மேலும் மதுப்பிரியர்கள் வசதியாக குடிப்பதற்கு டெண்டர் மூலம் பார்கள் தொடங்கப்பட்டது. ஆனால் பார்களின் லைசன்ஸ் சமீபத்தில் காலாவதியாகிவிட்டது. இதனால் பார்கள் அடைக்கப்பட்ட நிலையில் அரசு உத்தரவு மீறி சில பார்கள் செயல்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கிடையில் அடுத்த டெண்டருக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விதிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறி டெண்டரை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் லைசென்ஸ் இல்லாமல் மூடப்பட்ட பார்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பல கெடுபிடிகள் கொடுத்தாலும் தொடர்ந்து பார்கள் இயங்கி கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான வழக்கு., நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் இதை பயன்படுத்தி சட்டவிரோதமாக சில ஆசாமிகள் பார்களை நடத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக காவல்துறை சென்னையில் சில பார்களுக்கு சீல் வைத்த போதிலும், அவர்கள் போன பிறகு மீண்டும் கடையை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு பார்களை மூடுவதே சரி என மது பிரியர்களுக்கு அரசு தரப்பு ஷாக் கொடுத்துள்ளது.