நாடு முழுவதும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஏற்ற குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலரும் டெல்லியில் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசின் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி விவசாயிகளின் பருப்பு, சோளம், பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 5 ஆண்டுக்கு வழங்கப்படும். அதேபோல் மத்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகளின் போராட்டம் கட்டுக்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.