அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 4 தேதி நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கான ஆதார விலை., இத்தனை ஆண்டுக்கு தான்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!
ஆனால் நீதிபதிகள் தீர்ப்பு விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளித்ததை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் படி இந்த வழக்கு வரும் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.