ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகளுக்கும், அதில் பயிலும் மாணவர்களுக்கு பல நல திட்டங்களை அரசு செய்து வருகிறது. அடிப்படை கல்வி என்பது அத்தியாவசியமான தேவை என்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் இருந்து இலவச பேருந்து வசதிகள் வரை நடைமுறையில் உள்ளது.
இப்படி இருக்க இப்பொழுது கர்நாடக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளது.
அதாவது உருது மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைத்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஏப்ரல் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 8 மணி முதல் செயல்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.