தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நேற்று முன்தினம் (மார்ச் 7) காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவீர சிகிச்சைக்கு பின் அஜித், விரைவில் வீடு திரும்புவார் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நல்லபடியாக சிகிச்சையை முடித்து, இன்று (மார்ச் 9) அதிகாலை நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
பள்ளிகள் இனி 8 மணி முதல் 12.30 வரை செயல்படும்.., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
இந்த செய்தி, அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ள விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ளவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.