மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த (பிப்ரவரி 23) முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் UP வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த UP வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 59 ரன்களுக்கும், ஹீலி 29 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?? இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி தகவல்!!
இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல் அணி களமிறங்கியது. இந்த அணியில் களம் இறங்கிய வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் டெத் ஓவர்களில் UP வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனாலும் கடைசி 2 பந்தில் டெல்லி அணி வெற்றி பெற 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் டெல்லி வீராங்கனை டைட்டாஸ் அடிக்க முயற்சி செய்ய அது கேட்சாக மாறியது. இதனால் UP வாரியர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.