மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் கட்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அனைத்து சமூக வலைதளங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான தேதி வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தற்போது இதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். தற்போது வரை தேர்தலுக்கான தேதி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தேர்தல் தேதி செய்தியாளர் சந்திப்பில் தான் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.