எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஒரு பக்கம் தர்ஷினி ரவுடிகளிடமிருந்து தப்பித்ததை நினைத்து குணசேகரன் கடும் கோபத்தில் உள்ளார். இன்னொரு பக்கம் ஜனனி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என குணசேகரன் அவரிடம் சண்டை போடுகிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கதிர் ஞானம் எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து சக்தி சத்தம் போடுகிறார்.
மேலும் நமக்குள்ள ஒற்றுமை இல்லனா அந்த ஆளை எதுவுமே பண்ண முடியாது என அவர்களுக்கு அட்வைஸ் செய்கிறார். அடுத்ததாக குணசேகரன் ஜனனியிடம் குடும்ப கெடுக்குறதே நீதான் என சத்தம் போடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜானகி எல்லா பிரச்சனைக்கும் காரணம் நானா நீங்களா என்று கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டு விசாலாட்சி அதிர்ச்சியாகிறார். மேலும் ஜனனியின் கேள்விக்கு குணசேகரன் எந்த பதிலும் சொல்லாமல் ஆடிப் போய் நிற்கிறார்.