இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் அரசுத்துறைகளில் பணிபுரிய ஆர்வமுடன் இருப்பதால், போட்டிதேர்வு அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கேற்ப ரயில்வே துறையில் டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் (1092 பணியிடங்கள்), டெக்னீசியன் கிரேடு-3 (8052 பணியிடங்கள்) என மொத்தமாக 9,144 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை?? மத்திய அரசு தகவல்!!!
இதில் கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை என 3 நிலைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை மேலுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (PDF பைல்) பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் இன்று (மார்ச் 9) முதல் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் RRB இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.