நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஊதிய உயர்வு வாரத்தின் ஐந்து நாட்கள் வேலை போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு மாதத்தின் 2 வது மற்றும் 4வது சனிக்கிழமை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதை நிறுத்தி வாரத்தின் ஐந்து நாட்கள் வேலை அமல்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் வாரத்தின் ஐந்து நாட்கள் பணி, வருடம் தோறும் 17% ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இப்போது இந்தியன் வங்கி சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் அளித்துள்ளது. கூடிய விரைவில் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் நிறைவேற்றப்படும் என அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.