தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக கணிதம், புவியியல் போன்ற தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் தேர்வுகளை பற்றி ஆசிரியர்கள் கூறியது தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித் தாள்களை விட புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல் போன்ற பாடங்களில் தான் மாணவர்கள் அதிக அளவில் சென்டம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அனைத்து தேர்வுகளையும் தொடர்ந்து மார்ச் 22 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைய உள்ளது.