தமிழகத்தில் ரமலான் பண்டிகையால் தேர்வுகள் ஒத்திவைப்பு…, மாற்று தேதி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பிறை தெரியும் பட்சத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற இருந்த 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை பள்ளி கல்வித்துறை மாற்றி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும், சிறப்பு, சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10, 12-ம் தேதி நடைபெற இருந்த பட்டய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here