தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு கோடை மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருவதால் அருவி, ஏரி உள்ளிட்ட இடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து மாணவர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முக்கிய அறிவிப்பை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உள்ளார். கட்டாய கல்வி உரிமையின் படி, ஒன்று முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட வேண்டும்.
தமிழகத்தில் இனி இவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்., மின்வாரியம் விளக்கம்!!!
8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகை பதிவு, மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அந்தந்த பள்ளிகளே திட்டமிட்டு கொள்ளலாம். இதன் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவை வரும் 5ம் தேதிக்குள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.