சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. நேற்றைய எபிசோடில் அப்பத்தா தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய போது தான் புதிதாக தொடங்கியுள்ள டிரஸ்டின் பொறுப்புகளை இனிமேல் ஜீவானந்தம் தான் பார்த்துக் கொள்வார் என சொல்கிறார். இதை கேட்டு குணசேகரன், கதிர் ஆத்திரமடைகின்றனர். இப்படி இருக்கையில் இன்றைய எபிசாசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ப்ரோமோவில் அப்பத்தா அவருடைய 40% சொத்து முழுவதையும் நிச்சயம் மருமகள்கள் 4 பேர் பெயரில்தான் எழுதி வைத்துள்ளார் என்று தெரிகிறது. இந்த விஷயத்தை கேட்டு குணசேகரன், கதிர், ஜான்சி ராணி உட்பட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். பின் அப்பத்தா ஜீவானந்தத்திற்கு குணசேகரன் சிறந்த பரிசினை வழங்குவார் என்று சொல்ல அதற்காக அவர் மேடைக்கு வருகிறார். அப்போது கௌதம் குறி வைத்து சுட்டு விடுகிறார். ஆனால் அவர் யாரை சுட்டார் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும்.
ஆண் உள்ளாடை காட்டினால் ஓகே வா.., மாயாவை ரிவிட் அடித்த அர்ச்சனா – பிக்பாஸ் காரசாரமான விவாதம்!!