உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து!!

0

நேற்று நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை தழுவியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதல் கட்டமாக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணியின் சுழலிடம் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் வீழ்ந்தனர். அதிலும் குறிப்பாக அக்சர் படேலிடம் தான் இங்கிலாந்து வீரர்கள் பாதி பேர் தங்களது விக்கெட்டை இழந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்களுக்கும் சுருண்டது. இதன்மூலம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தது. மேலும் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்த தொடரின் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

நேற்று இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த காரணத்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கடைசி போட்டியில் ஒன்று வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை டிரா செய்ய வேண்டும். இது இரண்டும் இல்லாத பட்சத்தில் போட்டியை இங்கிலாந்து அணி வென்றால், ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here