உலக அளவில் உள்ள ஒவ்வொரு நாடும், அவர்களின் கால நிலைக்கு ஏற்ப பள்ளிகளில் விடுமுறை வழங்கி வருகிறது. இதில், இந்தியாவை பொறுத்த வரையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் மாதமான மே முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல, இங்கிலாந்தில் ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதனை கருத்தில் கொண்டே, இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அடுத்த வாரத்துடன் இத்தகைய பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், அங்குள்ள பெரும்பாலான பள்ளிகள் தற்காலிமாக தொடர்ந்து மூடப்படும் என அந்த நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கில்லியன் கீகன் தெரிவித்துள்ளார். அதாவது, இங்கிலாந்தில் 150 பள்ளிகளில் உள்ள கான்கிரீட் தளங்கள் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் இருப்பதால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை மீண்டும் தொடக்கமா? வெளியான முக்கிய தகவல்!!!