இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளது. சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஆய்வுப்பணி
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் கடைசியில் அல்லது மே மாதம் துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளை குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்ட குழு ஒன்று, கடந்த டிசம்பர் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம் வந்துள்ளனர். அப்போது தேர்தலில் போட்டியிடப்போகும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, தேர்தலை சுதந்திரமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் அதிகாரிகள் குழு.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், அமலாக்கத்துறை வங்கி அதிகாரிகள், வருமான வரித்துறை, போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான, தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இன்று தமிழகத்திற்கு வருகை தரப் போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.