சட்டசபையில் விதிகளை மீறி குட்கா கொண்டு சென்றதால் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.,கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது அந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.
குட்கா:
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,கள் விதிகளை மீறி சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்துள்ளார்கள் என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர்களுக்கு சபை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏகள் வழக்கை தொடர்ந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை விசாரித்த நீதிபதி அடிப்படை தவறுகள் பல இருப்பதாக கூறி அதனை ரத்து செய்தார். மேலும் தவறுகள் இல்லாத புதிய நோட்டீஸை திரும்ப அனுப்பலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஸ்டாலின் இரண்டாவது முறையாக நோட்டீஸை எதிர்த்து வழக்கை தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டாலின் தரப்பில் இருந்து குட்கா விற்பனை செய்யப்படுவதை சுட்டிக்காட்டுவதற்கு தான் நாங்கள் சட்டசபைக்கு குட்காவை கொண்டு சென்றோம் என்று தெரிவித்தனர்.
பிரபல சித்த வைத்திய சிவராஜ் சிவகுமார் மரணம் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்கால தடையை விதித்தார். இதனை சபை மேலாளர் தடையை நீக்க கூறி மேல்முறையீடு செய்தார். தற்போது அந்த மனு விசாரணைக்கு நேற்று வந்தது. மேலும் குட்கா விவகாரம் குறித்து இன்று நீதிபதி தீர்ப்பை வழங்கவுள்ளார்.