நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 20) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். இதனைத் தொடர்ந்து திருக்குறள் தேசிய நூலக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும், புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.