கேரளாவில் நிதி பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் KSRTC ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், “ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.” என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி கடந்த சில மாதங்களாக தாமதமில்லாமல் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஓய்வூதிய நிலுவை தொகை வழங்குவதில் தாமதமாகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகளிடம், “KSRTC ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய நிலுவை தொகை கணக்கிடப்பட்டு கூட்டுறவு சங்க பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்படும்” என கேரள அரசு தெரிவித்துள்ளனர்.