தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022, 2023 ஆம் ஆண்டுகளில் மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்கள், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி மதிப்பீடு செய்த நிலையில், மிகவும் மாறுபட்ட மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஓராண்டு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டனர். மேலும் பதவி உயர்வு உள்ளிட்ட நிலைகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. கல்வித்துறையின் இந்த நடவடிக்கை விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? அப்போ இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!