தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்து இருந்தது. அதன்படி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த பிப்.4ஆம் தேதி எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வர்கள் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தேர்வு முடிவுகளை, 2024 ஜூன் வெளியிட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, ஜூன் 23ம் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? அப்போ இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!