விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி ஷோ தான். இதில் புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் செய்யும் சேட்டைகள் அனைத்துமே ரசிக்கும்படியாக தான் இருக்கும். குறிப்பாக புகழுக்கு இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான் தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த 5வது சீசன் எப்பொழுது வெளியாகும் என்று பலரும் காத்து கொண்டிருந்தனர். இப்பொழுது அதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில், கடைசி வாரம் வரை சென்று பணப்பெட்டியுடன் வெளியேறினார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்து இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மக்களவை தேர்தல் 2024.., விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு.., முழு விவரம் இதோ!!