அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி 7 மாநாடு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் இருக்க லடாக் எல்லையில் சீன ராணுவம் படைகளை குவிப்பதால் போர் பதற்றம் நீடிக்கிறது. இதில் இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா நிலவரம் மற்றும் கறுப்பினத்தவருக்கு ஆதரவாக பற்றி எரியும் போராட்ட நிலவரம் குறித்து பிரதமர் மோடி அவர்கள் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி இந்திய-சீன எல்லை விவகாரம், உலக சுகாதார அமைப்பை சீரமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜி 7 அமைப்பை விரிவுபடுத்துவது, அதில் இந்தியாவை இணைப்பது குறித்து டிரம்ப் அவர்கள் பிரதமர் மோடியிடம் பேசியுள்ளார். அதில் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு டிரம்ப் அவர்கள் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட ஜி 7 நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா மகிழ்ச்சியாக உள்ளதாக மோடி கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |