தற்போது உள்ள சூழலில் கொரோனா பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இந்த கொரோனவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் பின்னணி பாடகரான எஸ்.பி.பி யும் இந்த கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பி
தமிழ் திரையுலகில் பின்னணி பாடகரான எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான இவர் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். தனியார் மருத்துவமணியில் தனிமை படுத்தப்பட்ட பிரிவில் இவருக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தொடர்ந்து அவர் உடல்நிலை சீராக இருந்தபோதிலும் அவரின் நுரையீரல் செயல்பாடு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உயிர்காக்கும் உபகரணங்கள் வாயிலாக அவருக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது இதனை குறிப்பிடும் விதத்தில் நேற்று ‘கிரிட்டிக்கல்’ என மருத்துவ அறிக்கை வெளியிட்டதாகவும் மருத்துவ வட்டாரம் கூறியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!!
எனவே இப்பொழுது போன்றே சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் அவருக்கு அவரின் நுரையீரல் திறன் அதிகரித்து இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறியுள்ளனர். மேலும் அவரால் 10 முதல் 12 நாட்களில் இயல்பாக சுவாசிக்கும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர் எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.