மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி, அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் டாக்டர்களின் ஆலோசனையைப் பின்பற்றி குருகிராமின் மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷா உடல்நிலை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, உள்துறை அமைச்சர் கொரோனா தொற்றுக்கு பிந்தைய பராமரிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நன்றாக இருக்கிறார் மற்றும் மருத்துவமனையில் இருந்து தனது பணியைத் தொடர்கிறார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
முன்னதாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி, கொரோனா தாக்கத்தில் இருந்த குணமடைந்த அமித்ஷா வீடு திரும்பினார். அவருக்கு ஆகஸ்ட் 2 ம் தேதி கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி குருகிராமின் மெதந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பரவ காரணமான சீனாவின் வுஹான் நகரில் கொண்டாட்டம்!!
பின்னர் ட்விட்டரில் பதிவிட்ட அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன் என்று தெரிவித்தார். மற்றொரு ட்வீட்டில், தனக்கு சிகிச்சையளித்த மற்றும் அவரை கவனித்துக்கொண்டதற்காக மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.