கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
Gold
Gold

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் வரும் நாட்களிலும் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

தங்கத்தின் விலை:

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்தது. சவரன் 43 ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இதற்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் கடந்த 1 வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. சவரன் 41 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold jewels
gold jewels

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 97 ரூபாய் அதிகரித்து ரூ.5,167 க்கும், ஒரு சவரன் 776 ரூபாய் உயர்ந்து 41,336 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 1600 ரூபாய் அதிகரித்து ரூ.76,300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 76.30 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here