நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவாக நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (ஜன.28) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல் 40 தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விரிவான தொகுதி பங்கீடு விவரம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா முதல் முறையாக ஏற்றிய கொடி., பாதியில் அறுந்து பரபரப்பு!!!