குடும்பத்தை ரெண்டாக்கும் கொரோனா – WORK FROM HOME ஆல் சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்..!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக சீனாவில் உள்ள சில நிறுவனங்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யுமாறு வலியுறுத்தின. இந்நிலையில் நாளுக்கு நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வேண்டி பல பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனாவால் வீடுகளிலே வேலை ..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 160 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் அதிகபட்சமாக சீனாவில் 3,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சீனாவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் உள்ள பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தின. இதனால் பணியாளர்கள் குஷியாக வீட்டில் பாதுகாப்பாய் வேலை செய்து வருகின்றனர்.

கொரோனாவால் விவாகரத்து..!

இதனால் குடும்பத்தார்களுடன் நேரத்தை செலவிட்டவாறு வேலை செய்து வந்தனர். வீட்டில் கணவன் மனைவி ஒன்றாக இருந்துள்ளதால் நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சீனாவில் விவாகரத்து வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here