கோடி சம்பளம் கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன்.., ரிஷப் ஷெட்டி கருத்தால் எழுந்த சர்ச்சை – கோபத்தில் ரசிகர்கள்!!

0

கன்னட திரையுலகில் முன்னணி பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான காந்தார திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது.

இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது நடிகர் ரிஷப் ஷெட்டி கோடி ரூபாய் கொடுத்தாலும் கன்னடத்தை தவிர வேறு எந்த மொழிகளிலும் ஒரு போதும் நடிக்க மாட்டேன்  என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here