நடிகை தேவயானியின் கணவரும், பிரபல இயக்குனருமாக விளங்கி கொண்டிருப்பவர் தான் ராஜகுமாரன். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த பெண் இனியா 12ம் வகுப்பை முடித்து விட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த அவருடைய தந்தை ராஜகுமாரன் ஆசைப்படுகிறார். அதுவும் இவர் இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் ஹிட்டான நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளாராம்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பேசியதாவது, நீ வருவாய் என படத்தில் விஜய் அஜித் நடிக்க இருந்தது, ஆனால் சில காரணத்தால் விஜய் விலகி பார்த்திபன் நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் அவர் நடிக்காததால் இந்த படத்தில் அவருடைய மகனை நடிக்க வைக்க ஆசைப்படுகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.