தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதியை வைத்து லியோ என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 மற்றும் இரும்பு கை மாயாவி என அடுத்தடுத்த படங்களை லோகி கை வசம் வைத்துள்ளார். இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் வைத்து படம் எடுக்க போகிறார். அதுவே ரஜினியின் கடைசி படம் என்று தகவல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது லோகேஷ் குறித்து பேசுகையில், அவன் இந்திய அளவில் பெரிய லெவலில் இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறான். லியோக்கு அப்புறம் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் பண்ண போறேன். அது மிகவும் பெருமை படக்கூடிய விஷயம். அதுமட்டுமின்றி அந்த படம் தான் ரஜினியோட கடைசி படம்னு சொல்றாங்க” என கூறி உள்ளார்.
ச்சீ.., எல்லை மீறும் முதலிரவு காட்சிகள்.., டிஆர்பிக்காக முகம் சுளிக்க வைத்த பிரபல சீரியல்!!
இதன்மூலம் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். தற்போது இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10 தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.