தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை தான். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் அதன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போல் வசூலை அள்ளினாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் படத்தோட கதையை மணிரத்னம் கொஞ்சம் மாற்றியதாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு படம். இருந்தாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடி தான் வருகிறார்கள். இப்படி ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் இவர் நடிகை சுஹாசினியை கடந்த 1988 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நந்தன் மணிரத்னம் என்ற மகன் இருக்கிறார்.
சமீபத்தில் சுகாசினி தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் வீட்டுக்குள்ளேயே ஹீரோவா வச்சுக்கிட்டு வெளியே தேடுறாரே இந்த மணிரத்னம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.