நாட்டில் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப், ஜம்மு ஆகிய நகரங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நகரத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த கனமழையால் வட மாநிலங்களில் மட்டும் தற்போது வரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உத்தரகாண்டில் இன்றும் நாளையும் மிக மிக பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அட.., நம்ம மணிரத்தினத்தின் மகனா இவரு?? செம்ம ஆளா இருக்காரே.., வெளியான புகைப்படம்!!
மேலும் இந்த மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது தவிர இன்றும் நாளையும் மட்டும் சுமார் 20 சென்டிமீட்டருக்கு மேலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர காரணமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என மாநில அரசு எச்சரித்துள்ளது.