கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தை குறித்து அவர் சமீபத்தில் நடந்த பேட்டியில் சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.
ஜிகர்தண்டா படம்:
சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மகான், ஜகமே தந்திரம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது கதை ஏழுவதில் பிஸியாக இருந்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது அவர் பேசியதாவது, இப்படத்தில் இடம்பெற்ற கார்த்திக் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதற்கு முன்பு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் அப்போது வருத்தப்படாத வ;வாலிபர் சங்கம் படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நான் சிவாவிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போனது, வில்லன் ரோலில் பாபி சிம்ஹா நடிக்கிறார் என்று சொன்னேன்.
இயக்குனர் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்.., 15 கோடி செலவில் உருவாகும் “RC15” பட பாடல்!!
அதற்கு பாபி சிம்ஹாக்கு பதிலாக பெரிய நடிகர்களை, அதாவது சத்யராஜ் போல் நடிகர்களை போடலாம் என்று கூறினார். ஆனால் பாபி தான் அசால்ட் சேது கேரக்டர்க்கு சரியாக இருக்கும் என்று சிவாவிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதன் பின்னர் தான் சித்தார்த் நடித்து படம் ஹிட்டானது என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.