கிராமப்புறத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்த மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு முதல் கிராம மக்களுக்கு வேலை வழங்கும் (100 நாள் வேலைத்திட்டம்) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது
அதன் படி இத்திட்டத்தில் வேலை பார்க்கும் ஊர் மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.241வரை வருவாய் ஈட்டலாம். இத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த 100 நாள் வேலை திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது தொழிலாளிகள் தங்களின் வருகைப்பதிவை டிஜிட்டல் முறையில் பதியலாம் என தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த டிஜிட்டல் முறைகளை செயல்படுத்துவதற்கான பணிகள் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. மேலும் இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தபடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளிகளிடம் பொறுப்பு உணர்வை அதிகப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.