தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் தளபதி விஜய் இன் பிகில் திரைப்படம் அதிகளவில் வசூலை எட்டியது. ஆனால் அதில் 20 கோடி நஷ்டம் என செய்திகள் பரவின அதை குறித்து அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பிகில்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் 2019 இல் தீபாவளியில் வெளியானது. ஆனாலும் பாக்ஸ் ஆபிசில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியது அது. இதன் மூலமாக விஜய்யின் கெரியரில் மிகப் பிரம்மாண்ட வசூல் ஈட்டிய படமாக அது மாறியது. இது அட்லீயுடன் இணையும் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிகில் படம் இவ்வளவு வசூல் செய்தும் 20 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என செய்தி சமீபத்தில் ஒரு முன்னணி மீடியாவில் செய்தி வெளியானது. அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால் தான் இந்த நஷ்டம் எனவும் கூறப்பட்டது.
அர்ச்சனா கல்பாத்தி
பிகில் படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என அதன் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருந்தார். மேலும் தேவைக்கு அதிகமாக பல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிகர்களை செட்டுக்கு வரவைத்து அவர்களை நடிக்க வைக்காமல் அட்லீ இருந்ததால் தயாரிப்பு செலவு அதிகமானது என்றும் அப்போது செய்திகள் வந்தது. அதனால் தற்போது 20 கோடி அளவுக்கு நஷ்டம் வந்துள்ளது என தகவல் பரவியது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் ட்விட்டரில் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது மாதிரியான எந்த பேட்டியும் தன தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தியை fact check செய்யும்படி அந்த மீடியாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |