சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி ஐபிஎல் தொடருக்காக தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
தோனி:
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் குறித்த எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு, முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, தோனியின் ஆட்டத்தை எதிர்நோக்கி இருப்பதே ஆகும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்திய தோனி, இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டதால் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்தின் மூலம், CSK-யானது தரமான அணியை தேர்வு செய்து வைத்துள்ளது.
FIH ஆடவர் ஹாக்கி அணிக்கான தரவரிசை வெளியீடு…, டாப் 10ல் இடம் பிடித்த இந்தியா!!
மேலும், இந்த வருடம் நடைபெற உள்ள சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால், இவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவிலான போட்டிகளில் ஓய்வு பெற்ற தோனி, 5 வது முறையாக சாம்பியன் வெல்வதற்காக, தற்போதிலிருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வலை பயிற்சி மேற்கொண்ட புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.